எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டை விலை அதிகரிப்பை தடுக்க, முட்டைக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று(12.03.2024) பிற்பகல் முட்டை உற்பத்தியாளர்களுக்கும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று விவசாய அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
தற்போது சந்தையில் 50 ரூபாவை விடவும் குறைந்த விலையில் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதில்லை. இதேவேளை, பொருளாதார மத்திய நிலையங்களில் குறித்த விலைக்கு குறைவாக முட்டைகள் விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் அந்த விலையில் சாதாரண மக்களுக்கு முட்டைகள் கிடைப்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டையின் விலையை குறைக்கும் வகையில் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.