81
இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளம் பெண்ணொருவர் தனது 9 மாத குழந்தையுடன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சௌந்தர்யா. 23 வயதான இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சௌந்தர்யா தனது 9 மாத குழந்தையுடன் ஹோபார்ம் பகுதியில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது மின்கம்பி அறுந்து கீழே கிடந்ததை அவர் கவனிக்காமல், அதன் மீது கால் வைத்ததில் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதில் சௌந்தர்யா தனது குழந்தையுடன் உடல் கருகி அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து தாய் மற்றும் குழந்தையி்ன் உடல்களை மீட்டனர்.
மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அலட்சியமாக பணிபுரிந்த மின்சார வாரிய அதிகாரிகள் மூவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்கம்பியை மிதித்து தாயும், குழந்தையும் உடல் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.