Home » 17 வயது மாணவருடன் தலைமறைவான 28 வயது ஆசிரியை! கைது செய்த பொலிசார்..

17 வயது மாணவருடன் தலைமறைவான 28 வயது ஆசிரியை! கைது செய்த பொலிசார்..

by namthesamnews
0 comment
தமிழகத்தில் பள்ளி மாணவருடன் தலைமறைவான 28 வயது ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை தாழம்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர் காணாமல் போனதாக, அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து பொலிசார் விசாரணை நடத்தியபோது, ஹெப்சிபா (28) என்கிற ஆசிரியை குறித்த மாணவருடன் நெருங்கி பழகியதால் பள்ளி நிர்வாகம் அவரை பணியில் இருந்து நீக்கியது தெரிய வந்தது.
இது 15 நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது. அதன் பின்னர் பொலிசார் விசாரணையை துரிதப்படுத்தியதில், ஹெப்சிபா கோவை மாவட்டத்தில் மாணவருடன் வீடு எடுத்து தங்கி இருந்ததை கண்டறிந்துள்ளனர்.
உடனடியாக காரமடையில் தங்கியிருந்த ஹெப்சிபாவை பொலிசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ஹெப்சிபா, ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.
ஏற்கனவே திருமணமான இவர், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் தன்னை விட 11 வயது இளையவரான மாணவருடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00