Home » இலங்கையில் மருந்தகம் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்!

இலங்கையில் மருந்தகம் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்!

by namthesamnews
0 comment

திருகோணமலை-திரியாய் மத்திய மருந்தகத்திற்கு பெட்ரோல் குண்டு தாக்குதல் நேற்றிரவு(14) 7.00 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தினால் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், மருந்து கொடுக்கும் இடம் மாத்திரமே சேதமாகிவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

காலை 8 மணி தொடக்கம் 4 மணி வரை மாத்திரமே மருந்து வழங்கப்பட்டு வருவதாகவும், வைத்தியசாலையில் காவலாளிகள் எவரும் இருக்கவில்லை எனவும், குறித்த வைத்தியசாலைக்கு 07 மணியளவில் பெட்ரோல் குண்டு தாக்குதல் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவத்துடன் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குச்சவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00