லண்டனில் நடந்த திடீர் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக 3 மூன்று படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிளாப்ஹாம் பகுதியிலேயே இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 4.59 மணிக்கு மேல் பெண் குறித்த பகுதியில் பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அவர் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், அந்த பெண் உட்பட மேலும் 2 பேர் காயமடைந்ததாக, சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் அந்நாட்டு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் தப்பி ஓடிவிட்டதால், பொலிசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். அப்பகுதி முழுவதும் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.