இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து தோற்றதால் அவமானப் பட தேவையில்லை என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் கூறியுள்ளார்.
இங்கிலாந்து உடனான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரையும் 3-1 என்று கைப்பற்றியது.
இங்கிலாந்து அணியின் இந்த தொடர் தோல்விகளை இங்கிலாந்து ஊடகங்கள் மோசமாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், இது குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் ஹூசைன், “கோலி, ராகுல், ஷமி, ரிஷப் பண்ட் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இந்தியா அணி வெற்றி கண்டுள்ளது. இது உண்மையிலேயே பாராட்டக்குரிய விஷயம். பெரிய வீரர்கள் யாரும் இல்லாமல் இந்திய அணி வெற்றி கண்டுள்ளது.
சொந்த மண்ணில் இந்திய அணி அபாரமான வெற்றி சதவீதத்தை கண்டுள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவதன் மூலம் அவர்களின் மனதளவில் வலிமை பெறுகின்றனர். வெற்றிகளையும் பெற்று வருகின்றனர். இதனால், இதற்கு இங்கிலாந்திற்கு எந்த அவமானும் இல்லை” என்றார்.