Home » தூங்கிக் கொண்டிருந்த காதலரின் பிறப்புறுப்பை அறுத்த பெண்!

தூங்கிக் கொண்டிருந்த காதலரின் பிறப்புறுப்பை அறுத்த பெண்!

by Vaishnavi S
0 comment

பெரு நாட்டில் செவிலியர் ஒருவர் தனது காதலரின் பிறப்புறுப்பை அறுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருபவர் Marleni Rimarachin Colunche(39).

இவரது காதலரான Ivan Cespedes (39) அதே மருத்துமனையில் வேலை பார்த்து வருகிறார். ஒன்றாக வசித்து வரும் இவர்களுக்கு மூன்று மாத குழந்தை உள்ளது.

இந்த நிலையில், மதுபோதையில் வீட்டுக்கு வந்த காதலரிடம் Marleni சண்டையிட்டுள்ளார். அதன் பின்னர் இருவரும் தூங்க சென்றுள்ளனர்.

தனது காதலர் துரோகம் செய்வதாக Marleni நினைத்துள்ளார். இதனால் அவர் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரது ஆணுறுப்பை சமையலறை கத்தியால் Marleni அறுத்துள்ளார்.

இதில் வலியால் அலறித் துடித்த Ivan-ஐ, Marleni மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவர் Ivan அவராகவே காயங்களை ஏற்படுத்திக் கொண்டதாக கூறியுள்ளார். இந்த விடயம் பொலிஸாருக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

தம்பதியின் குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக Marleni பிணையில் அனுப்பப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் வழக்கறிஞர் விசாரணையின் முடிவுகளுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00