லண்டனில் இந்தியா வம்சாவளியினர் ஒருவர் தன் மனைவியை துடிதுடிக்க கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பஞ்சாபிலுள்ள ஜோகி சீமா கிராமத்தைச் சேர்ந்தவர் மேஹாக் ஷர்மா (19). இந்த பெண்ணுக்கும் நியூ சாண்ட் நகரை சேந்த சாஹில் ஷர்மா (24) என்பவருக்கும் 2022ல் திருமணம் அகியுள்ளது.
திருமணம் ஆன 5 மாதங்களில் மேஹாக் ஷர்மா (19) மாணவர் விஷாவில் லண்டன் வந்துள்ளார். பின்னர் பணி விசா பெற்ற அவர், தனது கணவரான சாஹிலுக்கு கணவர் மனைவி விசா ஏற்பாடு செய்து அவரை லண்டனுக்கு வரவழைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி மனைவியை கொலை செய்துள்ளார் சாஹில்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பான விசாரணை கிங்ஸ்டன் க்ரௌன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாஹில் தான் கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால், ஏன் கொலை செய்தார் என்ற காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்த கொலை தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 26ம் தேதி வழங்கப்படும் என கூறி, நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது.