Home » 17 வயது சிறுவனை படுகொலை செய்ததாக 6 பேர் கைது

17 வயது சிறுவனை படுகொலை செய்ததாக 6 பேர் கைது

by Vaishnavi S
0 comment

வடக்கு அயர்லாந்தில் 17 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வடக்கு அயர்லாந்தின்County Londonderry-யில் Limavady பகுதியில் கொலை வெறித்தாக்குதல் நடப்பதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு Blake Newlan என்ற 17 வயது சிறுவனை சிலர் கத்தியால் குத்தியுள்ளனர்.

மேலும் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு சிறுவன் Blake சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். எனினும் படுகாயமடைந்த நபர் தொடர் சிகிச்சையில் உள்ளார்.

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பில் 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கொலை தொடர்பான விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00