Home » அதிக விலைக்கு ஏலம் போன மகாராணி கார்!

அதிக விலைக்கு ஏலம் போன மகாராணி கார்!

by namthesamnews
0 comment

மறைந்த பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்திய கார் மலைக்க வைக்கும் தொகையில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா அரச குடும்பத்தில் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத், கஸ்டம் ரேஞ்ச் ஓவர்(Custom Range Rover) என்ற சொகுசு காரை பயன்படுத்தி வந்தார்.

ராணி எங்கு சென்றாலும் இந்த காரைதான் பயன்படுத்துவார். இந்நிலையில், ராணி மறைவிற்கு பின் அந்த காரை அரச குடும்பத்தினர் பெரிதாக பயன்படுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்த காரை பிராம்ளி ஆக்சனர்ஸ் நிறுவனம் இலங்கை மதிப்பில் ரூ. 8.86 கோடிக்கு

( 2,24,850 பவுண்டுகள்) ஏலத்தில் வாங்கியுள்ளது.

ராணி பயன்படுத்திய அதே நம்பர் பிளேட்டுடன் (OU16 XVH) இந்த கார் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. காரின் உள்ளே விலை உயர்ந்த கருப்பு தோல், எமர்ஜென்சி லைட்டிங், வாகனம் எங்கு இருந்தாலும் எளிதில் கண்டறியும் வகையில் சென்சார் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் உள்ளது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00