தமிழக மாவட்டம் சிவகங்கையில் பள்ளி மாணவர் ஒருவர், தனது Hairstyle-ஐ தந்தை கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்தது.
சிவகங்கையின் மானாமதுரையில் உள்ள பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் வசித்து வந்த பள்ளி மாணவர் வேல்முருகன் (15).
இவர் கல்குறிச்சி அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை இளையராஜா மகனை முடிதிருத்தம் செய்துவருமாறு கடைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, வீடு திரும்பிய வேல்முருகன் தனக்கு பிடித்தமாறு Box Cutting Hairstyle செய்துள்ளார்.
இதனைப் பார்த்த சிறுவனின் பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அத்துடன் அவர்கள் மகனை கண்டித்து, மீண்டும் தலைமுடியை திருத்தி வெட்ட வைத்துள்ளனர்.
இதனால் சிறுவன் வேல்முருகன் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். பின்னர் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.