Home » உலக அழிவுக்கு இன்னும் 90 வினாடிகள் மட்டுமே உள்ளன

உலக அழிவுக்கு இன்னும் 90 வினாடிகள் மட்டுமே உள்ளன

by Vaishnavi S
0 comment

விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உலகின் முடிவுக்கு நாம் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தி உள்ளனர்.

புதிய அணு ஆயுதப் போட்டியின் அச்சுறுத்தல், உக்ரைன் – ரஷ்ய போர், செயற்கை நுண்ணறிவு மற்றும் பருவநிலை மாற்றக் கவலைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு விஞ்ஞானிகள் டூம்ஸ்டே கடிகாரத்தின் முள்ளை மாற்றி அமைத்துள்ளனர்.

அதன்படி, நேற்று (23) கடிகாரம் நள்ளிரவுக்கு இன்னும் 90 வினாடிகள் உள்ளவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கடிகாரம் உருவாக்கப்பட்டதிலிருந்து அதன் முள் நள்ளிரவை மிகவும் நெருங்கிய இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

புதிய திருத்தங்களுக்கு அமைய டூம்ஸ்டே கடிகார நேரம் தற்போது நள்ளிரவில் இருந்து 90 வினாடிகள் தொலைவில் உள்ளது. நள்ளிரவு ஆனதும் அதுவே உலகின் முடிவைக் குறிக்கும் நாளாக அமையும்.

உலககின் அழிவை கணக்கிடுவதற்காக விஞ்ஞானிகளாலும், ஆராய்ச்சியாளர்களாலும் உருவாக்கப்பட்டது தான் டூம்ஸ்டே கடிகாரம்.

1947 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாப்பு சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் டூம்ஸ்டே கடிகாரம் உருவாக்கப்பட்டது.

1947 ஆம் ஆண்டிலிருந்து உலகின் முடிவைக் குறியீடாகக் காட்டுவதற்காக சிக்காகோ பல்கலைக்கழக அணு அறிவியலாளர்கள் இந்த கடிகாரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இரண்டாம் உலகப் போரின் போது அணுகுண்டை உருவாக்குவதற்கான குறியீட்டுப் பெயரான மன்ஹாட்டன் திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகள் குழுவால் அணு விஞ்ஞானிகளின் புல்லட்டின் நிறுவப்பட்டது.

முதலில், அணுசக்தி அச்சுறுத்தல்களை அளவிடுவதற்கு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது, ஆனால் 2007 இல் புல்லட்டின் அதன் கணக்கீடுகளில் காலநிலை மாற்றத்தை சேர்க்க முடிவு செய்தது.

கடந்த 77 ஆண்டுகளில், மனித இனம் முழு அழிவுக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள் என்பதைப் பொறுத்து கடிகாரத்தின் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

டூம்ஸ்டே கடிகாரத்தின் நேரம் ஒவ்வொரு ஆண்டும் புல்லட்டின் அறிவியல் மற்றும் பாதுகாப்பு வாரியத்தின் நிபுணர்களால் அதன் ஸ்பான்சர் வாரியத்துடன் கலந்தாலோசித்து மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

உலகில் நடக்கும் மோதல்கள், பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து இதைப் பராமரிக்கும் விஞ்ஞானிகள் இக்கடிகாரத்தின் நேரத்தை மாற்றி வைப்பார்கள்.

உலகம் அழிவை நோக்கி செல்கிறது, முக்கியமாக அணு ஆயுத போர் நடக்க வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானிகள் கருதும் பட்சத்தில் இந்த முள்ளை இரவை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி வைப்பார்கள்.

ஒவ்வொரு ஜனவரியிலும் டூம்ஸ்டே கடிகாரத்தை மதிப்பிடப்படுகின்றது. இதற்கு முன்னர் பல முறை முள்ளை விஞ்ஞானிகள் இரவு நேரத்தை நோக்கி நகர்த்தி உள்ளனர்.

ஜனவரி 2023 இல், டூம்ஸ்டே கடிகாரம் நள்ளிரவுக்கு 90 வினாடிகளுக்கு மாற்றப்பட்டது – 1947 இல் கடிகாரம் உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவே நள்ளிரவுக்கு மிக அருகில் மாற்றப்பட்ட முதல் சந்தர்ப்பமாகும்.

கடிகாரம் 1947 இல் கடிகாரம் நள்ளிரவுக்கு 90 வினாடிகளே உள்ளதாக மாற்றப்பட்டது.

இதுவரை இந்த முள் (1947-2023) 24 தடவைகள் மாற்றப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டில், பனிப்போர் தணிந்த நிலையில் கடிகாரத்தின் முள் நள்ளிரவுக்கு 17 நிமிடங்களாக மாற்றப்பட்டது. இதுவே கடிகாரம் பேரழிவிலிருந்து தொலைத்தூரத்துக்கு சென்ற சந்தர்ப்பமாகும்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00