Home » 57 பந்தில் 140 ரன் விளாசிய வீரர்! நேரில் பார்த்து மிரண்ட தாய்

57 பந்தில் 140 ரன் விளாசிய வீரர்! நேரில் பார்த்து மிரண்ட தாய்

by Vaishnavi S
0 comment

பிக்பாஷ் லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் வீரசர் ஜோஷ் பிரவுன் (Josh Brown) 140 ரன்கள் விளாசியதை, அவரது தாய் நேரில் கண்டு ஆச்சரியப்பட்ட வீடியோ ரசிகர்களை கவர்ந்தது.

குயின்ஸ்லாந்தின் Carrara Oval மைதானத்தில் நடந்த அரையிறுதிப் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின.

இதில் பிரிஸ்பேன் ஹீட் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அடிலெய்டு அணியை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இப்போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் வீரர் ஜோஷ் பிரவுன் (Josh Brown)) 140 (57) ஓட்டங்கள் விளாசினார். இதில் 12 சிக்ஸர்கள் அடங்கும்.

இதன்மூலம், BBL வரலாற்றில் அதிக சிக்ஸர் விளாசிய வீரர் மற்றும் இரண்டாவது அதிவேக சதம் அடித்த வீரர் ஆகிய சாதனைகளை ஜோஷ் படைத்தார்.

ஜோஷ் பிரவுனின் தாயார் இந்தப் போட்டியை நேரில் ரசித்தார். அப்போது தொகுப்பாளினி எர்ன் ஹாலண்ட்இ “உங்கள் மகன் சாதனை படைத்திருக்கிறார் தெரியுமா? BBL இறுதி ஆட்டங்களில் அதிக ஸ்கோர் எடுத்தவர் அவர் தான்” என்றார்.

அதனை கேட்டதும் பிரவுனின் தாய் ஒரு கணம் ஆச்சரியமடைந்தார். பின் அவர், ‘ஓ அப்படியா..கடவுளே!, இது ஆச்சரியமாக இருக்கிறது.

என்னால் உண்மையில் பேச முடியவில்லை. அவன் மிகவும் அற்புதமான மகன். நான் அவனைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன்.

கிரிக்கெட் மட்டுமல்ல, கோல்ப் மற்றும் கால்பந்து போட்டிகளிலும் அவன் சிறந்து விளங்கினான். கால்பந்து போட்டியில் 8 வயதில் 10 கோல்கள் அடித்திருக்கிறான்’ என மகிழ்ச்சியுடன் கூறினார்.

வடக்கு பிரிஸ்பேனில் உள்ள Cooper கிரிக்கெட் கிடங்கில் Bat தயாரிக்கும் நபராக ஜோஷ் பிரவுன் வேலை பார்த்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00