சென்னை சைதாப்பேட்டை சத்யா நகர் ஆற்றங்கரை ஓரம் குப்பையில் இருந்து ஏழு மாத சிசு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
அந்த சிசுவின் உடலை கைப்பற்றி பொலிஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குப்பைக்கு நடுவில் இறந்த நிலையில் 7 மாத சிசு இருந்ததை பார்த்த உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர் .
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோட்டூர்புரம் பொலிஸார் சிசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார் சிசு உடலை வீசி சென்றது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.