பிக் பாஸ் வீட்டிலிருந்து விஜய் வர்மா இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷனில் வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல இந்திய டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
தற்போது 100 நாட்களை கடந்து செல்கின்றது.
தற்போது 100 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பணப்பெட்டியினை பூர்ணிமா எடுத்துச் சென்றுள்ளார். இன்னும் சில தினங்களில் முடிவடையும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்கனவே வெளியேறிய பழைய போட்டியாளர்கள் தற்போது வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் மிட் வீக் எவிக்ஷனில் விஜய் வர்மா குறைந்த வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் வர்மா பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் முதல் நாளே உள்ளே வந்துவிட்டு 21வது நாளில் எவிக் ஆகி வெளியே சென்றார். பின்பு 56வது நாளில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்துள்ளார்.
தற்போது இன்று 100 வது என்பதால் மிட் வீக் எவிக்ஷன் நடைபெற்றுள்ளதாகவும், இதில் விஜய் வர்மா வெளியேறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.