122
ஈரானின் கெர்மானில் உள்ள சாஹேப் அல்-ஜமான் மசூதிக்கு அருகில் நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் இந்த தாக்குதலில் 103 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 141 ஆக உயர்ந்துள்ளது.
ஈரானியப் புரட்சிப் படைத் தளபதியான காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்ட 4ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரது கல்லறைக்கு அருகாமையில் இந்த வெடிப்புகள் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.