ஈழத்து குயிலாக மகுடம் சூடியுள்ள கில்மிஷா உதயசீலனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வாழ்த்து தெரிவித்தார்.
இந்திய தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற சரிகமப எனும் பாடல் போட்டியில் முதலிடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர் நேற்று முன் தினம் நாட்டை வந்தடைந்தார்.
இதன்போது பெருமளவான மக்கள் விமான நிலையத்தில் திரண்டு கில்மிஷாவை வரவேற்றனர்.
இதன்போது வீதியின் இருமருங்கிலும் பெருந்திரளான மக்கள் அவருக்கு வரவேற்பளித்தனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது வாழ்த்துக்களை நேரில் சென்று கில்மிஷாவிற்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் கொள்கைகள் நிறவெறிக்கு சமம் என பல மனித உரிமை அமைப்புகள் சாடியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.