அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் பிள்ளைகளின் கண்முன் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டனில் (Houston) கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒரு வீட்டில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது 43 வயது ஆணும், அவரது 34 வயது மனைவியும் இறந்து கிடந்தனர்.
அவர்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக தெரிய வந்த நிலையில், தாக்கப்பட்டதால் காயங்களுடன் தம்பதியின் உடல்கள் மீட்கப்பட்டன.
முதற்கட்ட விசாரணையில், கணவன் தனது மனைவியை சுட்டுக் கொன்றதாக நம்புவதாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அத்துடன் மூன்று மகள்களின் கண்முன்னேயே தம்பதியர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் 6,9 மற்றும் 14 வயதுடைய மூன்று மகள்களும் தங்கள் பெற்றோர் வாக்குவாதம் செய்ததை கேட்டதாக கூறினர்.
கிறிஸ்துமஸ் நாளில் இந்த துயர சம்பவம் நடந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பில் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், ”உயிரிழந்த பெண் மற்றும் சந்தேக நபர் ஆகியோரின் அடையாளங்கள், ஹாரிஸ் கவுண்டி தடய அறிவியல் கழகத்தின் சரிபார்ப்பு நிலுவையில் உள்ளன.
இந்த சம்பவம் கொலை-தற்கொலை என நம்பப்படுகிறது, ஆண் மற்றும் பெண்ணின் பிரேத பரிசோதனை முடிவுகள் நிலுவையில் உள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.