குருநாகலில் தனது காதலியை சந்திக்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த நபரை தாக்கியதாக கூறப்படும் இரு சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ரஸ்நாயக்கபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் மாலை 6.00 மணியளவில் ரஸ்நாயக்கபுர – விகாரை வீதி பகுதியில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாழைச்சேனை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் தனது காதலியை சந்திக்க சென்ற போது பொலிஸ் உத்தியோகத்தருக்கும், சந்தேகநபருக்கும் வாக்குவாதத்தை ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து இரண்டு நபர்களால் அவர் தடியினால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலின் பின்னர், பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.