128
உலகளாவிய ரீதியில் தற்போது கோவிட்-19 தொற்று மீண்டும் தலைத்தோங்கியுள்ளது.
இவ்வாறு கோவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த மாதத்தில் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த 4 வாரங்களில் 850,000 கோவிட்-19 நோயாளிகள் பதிவாகியுள்ளதாக் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காலப்பகுதியில் கோவிட்-19 நோயினால் உலகளவில் சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.