கண்டி மாவட்டத்தில் உள்ள மதுபான விடுதியில் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக நேற்று 4 பேரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மதுபான விடுதியில் மது அருந்திக்கொண்டிருந்த போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது.
கட்டுகொஸ்தர ரணவன பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
கண்டி பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.