Home » சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கிடையிலான உறவு குறித்து சிங்கப்பூர் பிரதமர் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்..

சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கிடையிலான உறவு குறித்து சிங்கப்பூர் பிரதமர் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்..

by namthesamnews
0 comment

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் உள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்த சிங்கப்பூர் உறுதிபூண்டுள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் (Lee Hsien Loong)
குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடல்களைப் பாராட்டி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்திலேயே சிங்கப்பூர் பிரதமர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களின் அனுகூலமான முடிவுகளுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ள பிரதமர் லீ சியென் லொங்க், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில்இ இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை விரைவில் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிறந்த ஆரோக்கியத்திற்காகவும் இலங்கையை முன்னேற்றப் பாதைக்கு வழிநடத்தும் வேலைத்திட்டத்திற்காகவும் சிங்கப்பூர் பிரதமர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00