Home » இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது..

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது..

by namthesamnews
0 comment

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறைக் கடற்பரப்பில் கடற்படையினர் இன்று அதிகாலை மேற்கொண்ட சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையின்போதே மேற்படி மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள 25 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் அவர்களை ஒப்படைக்கக் கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00