75
பிரபல அமெரிக்க பாடகியும்,நடிகையுமான செலினா கோம்ஸ் தன் (இன்ஸ்டாகிராம்)சமூக வலைதளத்தில் இருந்து விடுப்பு எடுக்க போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் Instagram Story-யில் “நான் என் சமூக வலைதள பக்கத்திலிருந்து விடுப்பு எடுக்கிறேன். ஏனென்றால் உலகத்தில நடக்கும் வெறுப்பும், வன்முறையும்,பயங்கரமும் என் இதயத்தை நொறுக்குகிறது.
மனிதர்களை சித்திரவதை செய்து கொல்வதும், ஒரு குழுவினர் மீது வெறுப்பை உமிழ்வதும் மிக மோசமானது. நாம் அனைத்து மக்களையும், குறிப்பாக குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் மற்றும் நன்மைக்காக வன்முறையை நிறுத்த வேண்டும்.
அப்பாவி மக்கள் துன்புறுவதை என்னால் ஏற்க முடியவில்லை, அது என்னை பலவீனப்படுத்துகிறது. நான் இந்த உலகம் மாறவே விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இது அவர் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.