இலங்கையில் கார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிட்டம்புவ பிரதேசத்தில், வாடகைக்கு எடுத்திருந்த காரை இரண்டு பேர் விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர்.
இது குறித்த தகவல் கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்ததால், உடனடியாக அவர் அந்த சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்தனர்.
அவர்கள், வாடகை காரை எடுத்து அதில் இருக்கும் உதிரி பாகங்களை விற்க முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த கார் அநுராதபுரத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு பேர்களில் ஒருவர் எஸ்வெல்ல மற்றொருவர் நெலும்தெனிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதனால், வாகனங்கள் வைத்திருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.