127
நாட்டில் நாளை கடுமையான வெப்பநிலை நிலவும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வெப்பமான காலநிலை நீடித்து வருகிறது. இதனால், மக்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க அடிக்கடி தண்ணீர் அருந்தும்படி அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், நாளை தற்போது இருக்கும் வெப்பநிலையைவிட அதிகமான வெப்பம் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மேல், வடமேல், தென் மாகாணங்களிலும், இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் அதிகமான வெப்பநிலையை உணராலம் என கூறப்பட்டுள்ளது.