Home » ஈபிஎஸ் காரை திடீரென்று மறித்த இளைஞர்! தெரியவந்த காரணம்

ஈபிஎஸ் காரை திடீரென்று மறித்த இளைஞர்! தெரியவந்த காரணம்

by Vaishnavi S
0 comment

சென்னையில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காரை மர்மநபர் ஒருவர் திடீரென்று மறித்து கதவை திறக்க முயன்ற சம்பவத்தில், அந்த நபரை பொலிசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், இன்று வழக்கம்போல் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகம் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, இயல் இசை நாடக மன்றம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது, திடீரென இளைஞர் ஒருவர் காரை மறித்து தடுத்து நிறுத்தினார். அதுமட்டுமின்றி காரின் கதவையும் திறக்க முயன்றார்.

இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பின்னால் பாதுகாப்பு வாகனத்தில் வந்த காவலர்கள் ஓடிவந்து, அந்த நபரை பிடித்து அபிராமபுரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,அந்த நபர் மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (26) என்பது தெரியவந்தது.

 

அவர், தனது சொந்த ஊரில் கோயில் ஒன்று கட்டி வருகிறார். அதற்கு நிதி கேட்டு எடப்பாடி பழனிசாமியை பார்க்க முயன்றுள்ளார். ஆனால், பார்க்க முடியாததால், இப்படி ஒரு அதிரடி முடிவில் இறங்கியுள்ளார்.

இருப்பினும், போலீசார் வேறு ஏதும் காரணம் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00