121
பண்டஸிலிகா தொடரில் பாயர்ன் முனிச் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வுல்ஃப்ஸ்பர்க் அணியை வென்றது.
Volkswagen Arena மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் பாயர்ன் முனிச் (Bayern Munich), வுல்ஃப்ஸ்பர்க் (Wolfsburg) அணிகள் மோதின.
போட்டியின் ஆரம்பத்திலேயே மழை பெய்தது. ஆனாலும் வீரர்கள் அதனை பொருட்படுத்தாமல் ஆக்ரோஷமாக விளையாடினர்.
பாயர்ன் அணியின் இளம் வீரரான ஜமால் முசியாலா (Jamal Musiala) ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார்.
நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் (Thomas Muller) பாஸ் செய்த பந்தை மின்னல் வேகத்தில் தலையால் முட்டி கோலாக மாற்றினார்.
அதனைத் தொடர்ந்து 43வது நிமிடத்தில் பாயர்ன் அணிக்கு மீண்டும் ஒரு கோல் கிடைத்தது.
இம்முறை முல்லர் உதவியால் மற்றொரு நட்சத்திர வீரர் ஹரி கேன் அபாரமாக செயல்பட்டு கோல் அடித்தார்.
அதன் பின்னர் ஆட்டத்தின் 45+1வது நிமிடத்தில், வுல்ஃப்ஸ்பர்க் வீரர் மாக்ஸிமில்லியன் அர்னால்டு (Maxmilian Arnold) அபாரமாக ஒரு கோல் அடித்தார்.
இரண்டாம் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க போராடினர். ஆனால் ஒரு கோல் கூட விழாவில்லை.
இறுதியில் பாயர்ன் முனிச் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் பாயர்ன் முனிச் அணி 38 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.