இந்திய மாநிலம் கர்நாடகாவில் தன் மனைவி அரைகுறையாக ஆடை அணிந்ததாக கூறி காதல் கணவன் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம் அரிசிகெரேவின் ராம்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவன் (25). இவரது மனைவி ஜோதி (22).
இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.
ஜோதி மார்டன் உடைகளை அணிவது ஜீவனுக்கு பிடிக்காததால் அவருடன் சண்டையிட்டு வந்துள்ளார்.
எனினும், ஜோதி அவரது பேச்சை கேட்காமல் மாடர்ன் உடைகளை அணிந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன் தினம் ஜோதி வழக்கம்போல் உடையணிந்து வெளியே கிளம்பியுள்ளார்.
இதனை கவனித்த ஜீவன், அவரிடம் கோபத்தை காட்டியுள்ளார். ஆனால் அவரது மனைவி அதை பொருட்படுத்தவில்லை.
பின்னர் ஜோதியை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதாக கூறி ஜீவன் கூறி வெளியே கூட்டி சென்றுள்ளார்.
இருவரும் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு ஜீவன் திடீரென மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
அத்துடன் நிற்காமல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜோதியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து ஜீவன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து ஜோதியின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தப்பியோடிய கொலையாளி ஜீவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.