Home » மாணவனை கட்டிப்பிடித்து முத்தமிட்டு போட்டோஷூட் நடத்திய தலைமை ஆசிரியை ..

மாணவனை கட்டிப்பிடித்து முத்தமிட்டு போட்டோஷூட் நடத்திய தலைமை ஆசிரியை ..

by Vaishnavi S
0 comment

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் தலைமை ஆசிரியை ஒருவர், 10ஆம் வகுப்பு மாணவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படங்கள் இணைத்தில் வெளியாகி கண்டனங்களை பெற்றுள்ளது.

கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள முருகமல்ல கிராமத்தில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் புஷ்பலதா.

இவர் கல்வி சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில், 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவருடன் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்டு போட்டோஷூட் செய்துள்ளார்.

அவர் மாணவனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனால் தலைமை ஆசிரியையின் இந்த செயல் கடும் கண்டனங்களை பெற்றுள்ளது.

அத்துடன் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே இவர் பள்ளியில் உள்ள மாணவர்களுடன் நெருங்கி பழகுவதாக கூறப்படுகிறது.

இவ்விவகாரம் மாணவர்களின் கவனத்திற்கு சென்றதைத் தொடர்ந்து, உடனடியாக கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியை புஷ்பலதாவை கல்வித்துறை இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் அவர் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00