இலங்கையை உலுக்கிய இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இரத்தினபுரி-கஹவத்தையில் உள்ள கொடக்கதென்ன பகுதியில் வசித்து வந்த தாய் மற்றும் மகள் இருவரும் கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் 19ம் தேதி கொலை செய்யப்பட்டனர்.
இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கொட்டகெதன பிரதேசத்தை ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அதன்பின், இது தொடர்பான வழக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் விசாரணைகள் முடிந்த நிலையில், குறித்த நபருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.