வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் குசால் மெண்டிஸ், சமரவிக்ரமா அரைசதம் விளாசினர்.
இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 இன்று நடந்தது.
இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அவிஷ்கா பெர்ணான்டா 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து கமிந்து மெண்டிஸ் 19 ரன்களில் அவுட் ஆக, குசால் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரமா பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இவரின் அதிரடியான ஆட்டத்தினால் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
சிக்ஸர்களை பறக்கவிட்ட குசால் 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும்.
சமரவிக்ரமா ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 61 விளாசினார்.
அதேபோல் கேப்டன் அசலங்கா அதிரடியாக 21 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 44 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.