Home » மின்சாரம் தாக்கி 17 வயது பாடசாலை மாணவன் பலி!

மின்சாரம் தாக்கி 17 வயது பாடசாலை மாணவன் பலி!

by namthesamnews
0 comment

புத்தளத்தில் முடி உலர்த்தி மூலம் முடியை உலர வைத்த போது மின்சாரம் தாக்கி மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த அனர்த்தம் நேற்று (30) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

புத்தளம்இ ஐந்தாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 17 வயதுடைய துவான் சலீம் முஹம்மது சஹ்ரான் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் நேற்று தனது வீட்டில் குளித்து விட்டு முடி உலர்த்தி மூலம் முடியை உலர வைத்த சந்தர்ப்பத்திலேயே மின்சார தாக்குதலுக்கு உள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்துஇ குறித்த மாணவனை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்தனர். வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளைஇ குறித்த மாணவன் இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00