Home » இன்னும் சற்று நேரத்தில் சாந்தன் உடலுக்கு இறுதிச்சடங்கு!

இன்னும் சற்று நேரத்தில் சாந்தன் உடலுக்கு இறுதிச்சடங்கு!

by namthesamnews
0 comment

இந்தியாவில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சாந்தன் உடல் இலங்கை வந்தடைந்த நிலையில், இன்னும் சற்று நேரத்தில் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சாந்தன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் சிறப்பு விமானம் மூலம் இலங்கை கொண்டு வரப்பட்டது. அதன்பின், நேற்று யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கிருந்து யாழ்பாணத்தில் உள்ள வடமராட்சிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட சாந்தன் உடலை அவரது சகோதரி ஆரத்தி எடுத்து கண்கலங்கிய நிலையில் வரவேற்றார்.

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு சாந்தனுக்கு செய்ய வேண்டிய இறுதி அஞ்சலி அவரது சகோதரி இல்லத்தில் நடைபெற உள்ளது.

இறுதி அஞ்சலியை தொடர்ந்து, அவரது உடல் அதன்பின் அங்கிருக்கும் சனசமூக நிலையத்தில் வைக்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து சாந்தனின் பூர்வீக இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும்.

இறுதிச்சடங்குகள் முடிந்த பின் வெல்வெட்டித்துறை, பொலிகண்டிஊடாக எள்ளங்குளம் இந்து மயானத்துக்கு உடல் எடுத்து செல்லப்படும் என உறவினர்கள் கூறியுள்ளனர்.

 

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00