இலங்கைக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த மாதத்தின் முதல் 18 நாட்களில் மட்டும் 1,38,736 சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, ரஷ்யாவில்(20,101 பேர்) இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அடுத்த படியாக இந்தியா(18,564 பேர்), சீனா (10,696 பேர்) நாட்டு மக்கள் வருகை தந்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் முழுவதும் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்திருந்தனர். ஆனால், இந்த மாதம் வெறும் 18 நாட்களில் 1.38 லட்சம் பேர் வந்துள்ளதால், இந்த மாதம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.