133
மியன்மாரில் பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கையர்களை விடுவிப்பதில் தலையிடுமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
மியன்மாரின் துணை பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரிடம் நேற்று இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாத அமைப்பினால் மியன்மாரில் உள்ள முகாம் ஒன்றில் 56 இலங்கையர்கள் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டு இணைய அடிமைகளாக பணியமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.