இலங்கையில் திருமண விவகாரத்துகளின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்த்துள்ளதாக நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில், மேல்மாகாண நீதிமன்றம் சார்பாக தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, “கடந்த 2022ம் ஆண்டு மட்டும் நீதிமன்றங்களில் 48,391 விவாகரத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்துள்ளது” என்றார்.
விவகாரத்து என்பது நிரந்தர தீர்வு கிடையாது. இதன் பின் பலர் விவாகரத்து செய்ததை நினைத்து வருந்தியது உண்டு. எனவே, இந்த விஷயத்தில் மட்டும் எந்த ஒரு அவசரமும் இல்லாமல், ஒரு நிதான முடிவை எடுப்பது நல்லது என அறிவுறுத்தப்படுகிறது.