147
திருகோணமலையில் உள்ள சிறைச்சாலையில் இரு கைதிகளுக்கிடையே நடந்த பயங்கர மோதலில், சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா மஹ்ரூப் நகரை சேர்ந்த மொஹமட் அலி உவைஸ் முகம்மது உபயத்துல்லா என்பவரை, கடந்த 2ம் தேதி சிறைச்சாலையில் இருந்த மற்றொரு கைதி தாக்கியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் படுகாயம் அடைந்த மொஹமட் திருகோணமலையில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துவிட்டதாக திருகோணமலை பொலிசார் தெரிவித்துள்ளனர்.