134
இலங்கையின் பொருளாதார வலயத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் தற்போது அந்த பகுதியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் இயற்கை வள அமைச்சகத்திற்கு சொந்தமான ‘தேர்ட் இன்ஸ்டியூட் ஓவ் ஓசோனோலஜியின் ஜியோ யாங் கொங் 3’ கப்பல் இலங்கையின் பொருளாதார வலையத்திற்கு நுழைய இலங்கை அரசு அனுமதி மறுத்துள்ளது.
இதனால், இந்த கப்பல் மாலத்தீவை நோக்கி சென்றது. இந்நிலையில், தற்போது அந்த கப்பல் மீண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் காணப்படுவது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.