21ஆம் நூற்றாண்டில் நாம் அனைவரும் fast food வகைகளுக்கு அடிமையாகிவிட்டோம்.
ஆனால் எம் முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்த பாரம்பரிய உணவு முறைகளை நாம் அப்படியே மறந்துவிட்டோம்.
அந்த வகையில் முருங்கை கீரை என்பது அதிகமான நோய்களுக்கான மருந்தாகும்.
முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.
இந்த கீரையில் அதிகளவு ஊட்டச்சத்துக்களும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை அதிகளவில் காணப்படுகின்றன. இந்த முருங்கை கீரையை சாறாக குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தினமும் அதிகாலையில் முருங்கை சாற்றுடன் சீரகம், பூண்டு, மிளகு தூள் சேர்த்து குடித்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அத்துடன் குளிர்காலத்தில் ஏற்படும் பருவ காலத் தொற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்கவும் உதவும்.
இதில் வைட்டமின் ஏ, பி 1, பி2, பி 3, பி 6, பி 12 மற்றும் வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ளது. இது எலும்புகளை வலுவாக்கவும், ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கவும் உதவுகின்றது.
இரத்தசோகை இருப்பவர்கள் முருங்கை சாற்றை தினமும் குடித்தல் மிகவும் நல்லது. முருங்கையில் அதிகளவு பொட்டாசியம், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் உடலின் பல்வேறு செயல்பாடுகளை செயற்படுத்த உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது.