Home » தற்கொலைக்கு மதுவில் விஷம் கலந்ததால் வேறொருவர் மரணம்

தற்கொலைக்கு மதுவில் விஷம் கலந்ததால் வேறொருவர் மரணம்

by namthesamnews
0 comment

தமிழக மாவட்டம் சேலத்தில் சயனைடு கலந்த மதுவை தவறாக குடித்த நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சேலத்தின் முள்ளுவாடி கேட் பகுதியைச் சேர்ந்தவர் தசீர் உசேன். வெள்ளை வேலை செய்து வரும் இவருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளதால், அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் உசேனின் மனைவி அவரிடம் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

மனைவி திரும்பி வரமாட்டேன் என்று கூறியதால் தசீர் உசேன் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் மது வாங்கிக்கொண்டு அதில் வெள்ளிக்கு பயன்படுத்தும் சயனைடை அதில் கலந்து வைத்துள்ளார்.

ஆனாலும் உடனே அதனை அருந்தாமல் மனைவியிடம் ஒருமுறை பேசிப்பார்க்கலாம் என்று எண்ணிய உசேன், பீரோவுக்கு அடியில் மதுவை மறைத்து வைத்துள்ளார்.

அப்போது வீட்டுக்கு வந்த அவரது சகோதரர் சதாம் உசேன் (32), அண்ணன் வழக்கமாக பீரோவுக்கு அடியில் மதுவை வைத்துள்ளாரா என்று பார்த்துள்ளார்.

அங்கிருந்த சயனைடு கலந்த மதுவை எடுத்துக் கொண்டு, தனது நண்பர் அசேனுடன் டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் மது அருந்தியுள்ளனர்.

சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அசேன் பரிதாபமாக உயிரிழந்தார். சாதம் உசேனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், மதுவில் சயனைடு கலந்த தசீர் உசேனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00