Home » கணவரின் மதுப்பழக்கத்தால் தீக்குளித்த கர்ப்பிணி மனைவி

கணவரின் மதுப்பழக்கத்தால் தீக்குளித்த கர்ப்பிணி மனைவி

by Vaishnavi S
0 comment

தமிழக மாவட்டம் குமரியில் கணவருடனான தகராறினால் கர்ப்பிணி மனைவி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் அருகே உள்ள கீரிப்பாறை லேபர் காலணியைச் சேர்ந்தவர் அபிஜித் (33).

இவரது மனைவி ரஞ்சிதா (25) ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இதனால் வளைகாப்பு நடத்தப்பட்டு தனது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார்.

இந்த நிலையில், ரப்பர் தொழிற்கூட தொழிலாளியான அபிஜித் மனைவியை பார்க்க வந்துள்ளார்.

அப்போது அவர் மதுபோதையில் இருந்ததால் மனைவி அவரிடம் சண்டையிட்டுள்ளார்.

மதுப்பழக்கத்தை கைவிடுமாறு அவர் கூறியபோது அபிஜித் அவருடன் தகராறு செய்துள்ளார்.

இதனையடுத்து ரஞ்சிதா திடீரென மண்ணெண்ணையை மேலே ஊற்றிக் கொண்டு தீக்குளித்துள்ளார்.

அவரை காப்பாற்ற முயன்ற அபிஜீத்துக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00