குஜராத் – துவாரகா மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 8 மணிநேரத்தின் பின் மீட்கப்பட்ட 3 வயது பெண் குழந்தை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற போது உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை தனது வீட்டின் அருகிலுள்ள மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளார்.
இந்தநிலையில் தீயணைப்பு படையினர், இராணுவத்தினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து குறித்த சிறுமியை மீட்க பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 8 மணித்தியாலத்தின் பின்னர் குறித்த குழந்தை மீட்கப்பட்டது.
பின்னர் அந்த குழந்தை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது