Home » அதிபர் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை: ரணில் திட்டவட்டம்!

அதிபர் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை: ரணில் திட்டவட்டம்!

by namthesamnews
0 comment

சர்வதேச நாணய நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

ரணில் அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்து பேசிய அதிபர், நாடு பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் மிகவும் முக்கியமானதென குறிப்பிட்டுள்ளார்.

அந்த வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் ஜூலை இறுதி வரை நடைமுறையில் உள்ளதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது எனவும் அதிபர் தெரிவித்துள்ளார்.

நிதியச் செயற்பாட்டின் பின்னர் அரசியலமைப்பு ரீதியாக அதிபர் தேர்தலை நடத்துவதற்கான நேரம் வருவதால் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு அதிபர் தேர்தல் தடையாக இருக்காது எனத் தெரிவித்த அதிபர், அதற்கேற்ப தேர்தல் வரைபடத்தை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அத்தோடு, அதிபர் தேர்தலுக்கு முதலில் தயாராகுமாறு அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00