வெளிநாட்டு தூதுவர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது திருகோணமலையில் உள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் மற்றும் நல்லிணக்கம் குறித்து வெளிநாட்டு தூதுவர்களுடன் ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், மரியாதை நிமித்தமாக வருகை தந்திருந்த சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் கிழக்கு ஆளுநர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாகவும் தூதுவர்கள் அவரி்டம் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.