145
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், நாட்டை ஆட்சி செய்யக்கூடிய ஆற்றல் மிகுந்த தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது கிடைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்துகொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் சக்தியும், ஒழுங்கமைப்பு வலையமைப்பும் கொண்ட கட்சிகள் இரண்டு மட்டுமே இலங்கையில் உள்ளதாகவும் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தி எனவும் மற்றது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.