Home » மகளிரின் முன்னேற்றத்திற்காக நாட்டின் கொள்கையை மாற்றிய மோடி: கவர்னர்

மகளிரின் முன்னேற்றத்திற்காக நாட்டின் கொள்கையை மாற்றிய மோடி: கவர்னர்

by namthesamnews
0 comment

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் உள்ள அவ்வையார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கவர்னர் ஆர்.என்.ரவி மகளிர் மேம்பாடு, முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு தேசத்தின் கொள்கையை பிரதமர் மோடி மாற்றியுள்ளதாக கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கான பல்வேறு அடிப்படை மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். மகளிர் மேம்பாடு, முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு தேசத்தின் கொள்கையை பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.

குறிப்பிடத்தக்க அளவிற்கு மாணவிகளின் சேர்க்கை உயர்ந்துள்ளது. பல இடங்களில் மாணவர்களைவிட மாணவிகள்தான் ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்களின் சுகாதாரத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒவ்வொரு அம்சங்களிலும் ஆண்களுக்கு சமமாக பங்களித்து வருகிறார்கள்.

பார்லிமென்ட் , சட்டசபை தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளதால், சட்டங்களை உருவாக்குவதிலும் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளது. 2047ம் ஆண்டுக்குள் நமது தேசம் தன்னிறைவு பெற்ற நாடாக திகழ வேண்டும் என்பதே நமது நோக்கம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00