Home » இலங்கையில் புகைப்படங்கள் அடங்கிய தபால் முத்திரைகள்!

இலங்கையில் புகைப்படங்கள் அடங்கிய தபால் முத்திரைகள்!

by namthesamnews
0 comment

இலங்கையில் மக்கள் தமது புகைப்படங்கள் அடங்கிய தபால் முத்திரைகளை உருவாக்குவதற்கான வாய்ப்பை தபால் திணைக்களம் வழங்கியுள்ளதாக, தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், மக்கள் தங்களுடைய புகைப்படங்களைப் பயன்படுத்தி தபால் தலைகளை உருவாக்க முடியும். 2000 ரூபா செலவில் 20 முத்திரைகள் அடங்கிய தாள் வழங்கப்படும். இலங்கையில் இந்த முத்திரைகளை வழமையான முத்திரைகளாகப் பயன்படுத்த முடியும்.

இத்தகைய முத்திரைகள் பிறந்தநாள் அல்லது முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் வகையிலும், திருமண அழைப்பிதழ்களை இடுகையிடவும் பயன்படுத்தப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00