மக்களவை தேர்தலுக்கான திமுக கூட்டணியின் முதல் வேட்பாளர் சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதில் ஒரு சில கட்சிகளுடன் சுமூகமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்தது. அதில், ஒன்றுதான் ஐயூஎம்எல் கட்சி. இந்த கட்சிக்கு ராமநதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து திருச்சியில் இன்று இந்த கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், ஐயூஎம்எல் சார்பில் நவாஸ் கனி மீண்டும் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கடந்த தேர்தலைப் போன்றே, இந்த தேர்தலிலும் அவர் ஏணி சின்னத்திலேயே போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் திமுக கூட்டணி கட்சியின் முதல் வேட்பாளர் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இனி அடுத்தடுத்த கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கலாம்.