சுவிட்சலாந்தில் ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் விமான தலைமை ஊழியராக முன்னேறி, சாதித்து காட்டியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள லுட்சேர்ன் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுருதன் கந்தையா. ஈழத்தமிழரான இவர், தான் கற்ற கல்வியை விட்டுவிட்டு, தன் மனதிற்கு பிடித்த விமான பணியாளராக சுவிட்சர்லாந்தில் உள்ள பிரபல விமானநிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார்.
மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில், தற்போது அவர் முதல் தலைமை ஊழியராக (Chef de cabin) M/C EU முன்னேறியுள்ளார். இதற்கான சான்றிதழை அந்த நிறுவனம் கொடுத்துள்ளது.
மனதிற்கு பிடித்த வேலையை, தொடர்ந்து நம்பிக்கையுடன் செய்து வந்தால், எதுவும் சாதிக்கலாம் என்பதற்கு சுருதன் கந்தையா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என நெட்டிசன்கள் வாழ்த்தி வருகின்றனர்.